திருவாரூர், பிப்.2 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங்காடு (பெரும்பண்ணை யூர்) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத நிலையை கண்டித்தும், நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெ ரும் சாலை மறியல் போராட்டம் அரச வனங்காடு கடைவீதியில் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்து வர் இல்லாத அவலநிலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். லேப் டெக்னீசியன் மற்றும் இதர ஊழியர்களை நியமிக்க வேண்டும். செவிலியர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பழுதடைந்துள்ள மருத்துவ உபகரணங்களை மாற்றி புதிய கருவிகளை வழங்க வேண்டும். பழைய கட்டி டத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டி தர வேண்டும். 24 மணி நேரமும் செயல் படும் மருத்துவமனைக்கேற்ப தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலை மையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த திருவாரூர் வட்டாட்சியர் செந்தில்குமார், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். திருவாரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை உதவி இயக்குநர் தலைமையில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, கொர டாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால், சிபிஎம் அரசவனங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சி.சுலக்சனா லோகநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதைத்தொடர்ந்து, உடனடியாக மருத்து வர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் பணியில் தற்காலிக பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு மாதத்தில் நிறைவேற்றுவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.