திருச்சிராப்பள்ளி, ஆக.13-
திருச்சி தில்லை நகர் 10வது கிராஸ் மேற்கு விஸ்தரிப்பில் அப்பல்லோ சிட்டி சென்டர்-அவசர சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த அவசர சிகிச்சை மையம், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஆலோசனை கள், 24 மணி நேரமும் அவசர சிகிச்சை, விரிவான ஆய்வகம் மற்றும் கதிரி யக்க நோய் கண்டறிதல், ஆம்புலன்ஸ் சேவை கள், மருந்தகம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டது.
திறப்பு விழாவில் அப்பல்லோ மருத்துவ மனைகளின் மதுரை பிராந்திய தலைமை இயக்க அதிகாரி நீலக்கண்ணன் பேசுகை யில், “உயர்தர சுகாதார சேவைகளை வழங்க அப்பல்லோ சிட்டி சென்டர் அவசர சிகிச்சை மையம் 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்க தயாராக உள்ளது” என்றார்.
விழாவில் முதுநிலை பொது மேலாளர் சாமுவேல், மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம், பொது மேலாளர் சங்கீத், முதுநிலை மேலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.