புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் வெ.பழனிவேல் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் குமர வேல், வரலாற்று ஆசிரியர் அருந்தேவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ஆசிரியர் சௌ.தெய்வீகன் வரவேற்க, மாணவர் கோகுல கண்ணன் நன்றி கூறினார். நிகழ்வை ஆ.மணிகண்டன் ஒருங்கிணைத்தார்.7