districts

img

புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், மே 31-  ஒவ்வொரு ஆண்டும் மே 31 உலக  புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்ப டும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையிலும், புகையிலை நுகர்வை  குறைப்பதற்கான வகையிலும், நிறுவ னங்கள் மற்றும் தனி நபர்களை ஊக்கு விக்கும் வகையிலும், உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருச்சிற் றம்பலம் கடைத் தெருவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார மருத்துவ  அலுவலர் மருத்துவர் எஸ்.அருள், பேரா வூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநா தன், செல்வேந்திரன் ஆகியோர் கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப் பட்டது. இந்த பேரணியில் சுகாதார ஆய்வாளர் கள், களப் பணியாளர்கள், ஊராட்சி உறுப்பி னர்கள், சீஷா தொண்டு நிறுவனப் பிரதிநிதி  மணிவண்ணன் உட்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். பேரணியானது, திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் தொடங்கி கடைவீதியில் நிறைவடைந் தது.