districts

img

திருச்சி மாநகராட்சியுடன் கீழக்குறிச்சி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜன.13 - தமிழ்நாடு அரசு, ஊராட்சிகளை மாநகராட்சியோடு  இணைக்கும் பணியில், திருச்சி மாவட்டத்தில் 22 ஊராட்சிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. அதில் கீழக்குறிச்சி ஊராட்சியும் அடங்கும்.  கீழக்குறிச்சி ஊராட்சி, ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ள பகுதி. கீழக்குறிச்சி ஊராட்சி யில் உள்ள 12 வார்டுகளில், 4 வார்டுகள் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். அது மட்டுமல்லாமல், விவசாயக் கூலி தொழிலாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக் கூடிய நூறு நாள் வேலை திட்டம் முற்றிலும் முடக்கப்படும்.  கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 வார்டுகளை மாநகராட்சியோடு இணைப்பதை கைவிட வேண்டும். மேலும் விமான நிலைய விரிவாக்கத்தால் கீழக் குறிச்சி, நத்த மாடிப்பட்டி செல்லும் சாலை மூடப்படுவ தாக அதிகாரிகள் கூறி வருகிறார்கள். எனவே நிரந்தர மான சாலை வசதி அமைத்து தர வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் கிராம மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.