புதுக்கோட்டை, ஜூலை 30-
‘ஒன்றிய அரசு மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை யில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தி னம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் க.முகமதலி ஜின்னா, தொமுச பேரவைச் செயற்குழு உறுப்பினர் எம். வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவா னந்தம், தலைவர் உ.அரசப்பன், ஏஐசிசிடியு மாவட்டச் செய லாளர் எம்.முத்துராஜா, தலைவர் எஸ்.சிவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கை விட வேண்டும். தொழிலாளர் சட்டத்திருத்தத் தொகுப்பைக் கைவிட வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.