தஞ்சாவூர், பிப்.22 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை வட்டாரக் கல்வி அலுவலர் க.கலா ராணி தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் ரா.தெய்வானை, வட்டார வளமைய ஏற்பார்மையாளர் அ.முருகேசன் ஆகி யோர் பங்கேற்றனர். மாநில நல்லாசிரியர் அ.காஜா முகை தீன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை ச.சித்ரா தேவி ஆண்டறிக்கை வாசித்தார். துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா பாருக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ.கௌ தமன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சி.ஜசிரா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் பெ.ரேணுகா நன்றி கூறினார். நிகழ்வில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.