மன்னார்குடி, மார்ச் 28- ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா மார்ச் 26 அன்று நிர்வாக அதி காரி கே.வெங்கட்ராமன் தலைமையில் நடை பெற்றது. விழாவில் கல்லூரி இயக்குநர் எம்.செந்தில் முருகன் வரவேற்றார். முதல்வர் சி.சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியர் களுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கினார். துணை முதல்வர் எஸ்.செல்ல முத்துக்குமரன் நன்றி கூறினார். விழாவில் ஏவிசி தன்னாட்சி கல்லூரி முதல்வர், ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குநர், பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.