மயிலாடுதுறை, நவ.5 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் முத லமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா நடைபெற்றது. இத்திட்டங்களின் கீழ் பயனடைந்த 6 பயனாளி களுக்கு நினைவுப் பரிசு களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மயிலாடுதுறை அரசு பெரி யார் மாவட்ட தலைமை மருத் துவமனை, அரசு மருத்து வமனை-சீர்காழி, அரசு மருத்துவமனை-வைத்தீஸ் வரன் கோயில், அரசு மருத்து வமனை- குத்தாலம், அரசு மருத்துவமனை-பொறை யார், அரசு மருத்துவமனை-தரங்கம்பாடி, ராம் போன்ரூ ஜாயின்ட் மருத்துவமனை-மயிலாடுதுறை ஆகிய மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டங்களின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொடர்பு அலுவலர்கள், மருத்துவமனை வார்டு மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத் தின் கீழ் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட 5 பயனாளி களுக்கு மருத்துவக் காப் பீட்டு அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.