திருச்சிராப்பள்ளி, நவ.28- அண்ணாமலை பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களின் மாநிலம் தழுவிய கோரிக்கை விவாத மாநாடு அண்ணாமலை ஒருங்கிணைந்த அயற் பணி பேராசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் ஞாயிறன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க தலைவர் முனைவர் ரொனால்ட்ரோஸ் தலைமை வகித்தார். தமுஎகச மாநில துணைத்தலைவர் முத்து நிலவன் சிறப்புரையாற்றினார். சங்க துணைத்தலைவர்கள் பிராபாகரன், சரவணன் ஆகியோர் விளக்கிப் பேசினர். பொதுச்செயலாளர் முனைவர்.அழ கப்பன்காந்தி வரவேற்றார். பொருளாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார். மாநாட்டில், அண்ணாமலைப் பல்க லைக்கழக அயற்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணிவரன்முறை செய்தல் என்ற ஒற்றை கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.