அறந்தாங்கி, ஜூன் 23 -
மிகவும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதசாமி ஆலயத் தில் மார்கழி மாத திருவாதிரை பெரு விழா மற்றும் ஆனித் திருமஞ்சனப் பெருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு 2 முறை திருத்தேரோட் டம் நடைபெறும்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இவ் வாலயத்தில் இந்தாண்டு ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 15 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளியன்று திருத்தே ரோட்டம் நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு நிலையை அடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.