கும்பகோணம், செப்.3- தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் அனிதா நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடு மைகளை தடுத்து நிறுத்த கோரியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தஞ்சை மாவட்டத்தில் 110 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, நீட் நகல் எரிப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தா ளில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு ஆர்ப் பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் செயற் குழு உறுப்பினர் ராகுல் உட்பட கல்லூரி மாணவ-மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.