புதுக்கோட்டை, ஜூலை 11:- அங்கன்வாடி திட்டத்தை தனி யாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை யைக் கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கன்வாடி திட்டத்தை தனியா ருக்கு தாரைவார்க்கக்கூடாது. அங்கன் வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்டி ஊதியம் ரூ.26 ஆயிரம், உதவி யாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். 5 ஆண்டுகள் பணிமுடித்த மினி மைய ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். துறைசார்ந்த பணிகளை விரைந்து முடிக்க புதிய செல்போன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கான்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி தொடக்கவுரையாற்றினார். சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, பொ ருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, மாநில செயற்குழு உறுப்பி னர் கே.எம்.ரேவதி உள்ளிட்டோர் பேசினர். அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு அங்கன்வாடி பணியாளர் செல்வியை அடித்த மாவட்ட திட்ட அலுவலர் மீது காவல்துறை வழக்கு பதிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்ட பொருளாளர் கே.கலா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம். செல்வராணி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலச் செயலாளர் த.சகிலா ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் வி.தவமணி தலைமை வகித்தார், மாவட்ட செயலா ளர் ஏ.பிரேமா,சிஐடியு மாவட்ட தலை வர் எம்.கே.என்.அனிபா, அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. செங்குட்டுவன், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சித்ரா ஆகியோர் பேசினர். 500-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.