தஞ்சாவூர், ஏப்.26 -
பள்ளி, கல்லூரிகளுக்கு விடு வதுபோல, அங்கன்வாடி மையங் களுக்கும் ஒரு மாத காலம் விடு முறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தினர் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தை செவ் வாய்க்கிழமை மாலை தொடங்கி னர். இப்போராட்டம் புதனன்றும் தொடர்ந்தது.
\ தஞ்சாவூரில் நடைபெற்ற காத் திருப்புப் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பாரதி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சி.கலா, நிர் வாகிகள் விஜி, ஆரோக்கியமேரி, உமா, தையல் நாயகி, ஹேமா, சாந்தி, புவனேஸ்வரி, பாரதி, சாந்தி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் மு. மணிமேகலை, உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். புதனன்றும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந் தது. திருச்சிராபள்ளியில் நடை பெற்ற போராட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கலைச் செல்வி. மாவட்டத் தலைவர் மல் லிகா பேகம், மாவட்டச் செயலாளர் சித்ரா, மாவட்டப் பொருளாளர் ராணி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாவட்டத் தலை வர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூரில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவர் வி.தவமணி, செயலாளர் அ. பிரேமா, சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என் அனிபா, பொருளா ளர் இரா.மாலதி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலை வர் பி.பத்மாவதி, மாவட்டச் செய லாளர் என்.சாந்தி, மாவட்டப் பொரு ளாளர் கே.கலா சிஐடியு மாவட் டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், பொருளாளர் ப.சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் ஞானத்தம்பி, மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன் ஜெயராம், எம்.தண்டபாணி, எஸ். கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் நடை பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜய லெட்சுமி, செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
போராட்டத்தை வாழ்த்தி கந்த வர்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) எம்.சின்னதுரை வாழ்த்திப் பேசி னார்.