districts

முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கான வழி காட்டும் நிகழ்ச்சி நடைபெற் றது

அறந்தாங்கி, ஆக.18 -

       புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கான வழி காட்டும் நிகழ்ச்சி நடைபெற் றது. கல்லூரி முதல்வர் பேரா சிரியர் வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். செங்கல் பட்டு அரசினர் கலைக் கல்லூரி  தமிழ்த் துறைத் தலைவர்  மாதவன் சிறப்புரையாற்றி னார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ,  மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரித் தமிழ் துறைத்தலை வர் முனைவர் கா.காளிதாஸ் வரவேற்றார். பேரா.பழனி துரை நன்றி கூறினார்.