மயிலாடுதுறை, பிப்.5 - தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடியில் தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்த வீட்டில் ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற ஓவி யர்களின் ஓவிய கண்காட்சி பிப்ர வரி 7 முதல் துவங்குகிறது. 1706 ஜூலை 9 இல் தரங்கம்பா டிக்கு வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் சீகன்பால்கு தமிழ்மொழியை மிக விரைவாக கற்றுத்தேர்ந்து, இந்தியா விலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை மொழிபெயர்த்து இயந்திரம் மூலம் காகிதத்தில் அச் சேற்றினார். அத்துடன் தமிழ் நாட்காட்டி, 70 ஆயிரம் வார்த்தை கள் கொண்ட தமிழ் அகராதியை காகிதத்தில் அச்சடித்து வெளி யிட்டார். மேலும் ஓலைச்சுவடியி லிருந்த பழம்பெரும் தமிழ் நூல் களை காகிதத்தில் அச்சேற்றி நூலாக வெளியிட்டார். தமிழுக்கு பெரும் பங்காற்றிய அவர் இறக்கும் வரை தரங்கம் பாடியில் வசித்து வந்த 313 ஆண்டு கள் பழமையான அவரது வீடு 2017 முதல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. சீகன்பால்கு பயன்படுத்திய பொருட்கள், பழமையான அச்சு இயந்தி ரங்கள், இந்திய-டேனிஷ்-ஜெர்மா னிய கலாச்சார சுவடுகள் என எண்ணற்ற பதிவுகளோடு வர லாற்றை சுமந்து நிற்கிறது சீகன் பால்கு வீடு. இவ்வீட்டின் மேல் தளத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர்களான மேனன் பர்சியன், கிறிஸ்டியன் பெர்க்மென், ஸ்டெஃபான் ஸ்வார்செர் மற்றும் ஜெர்மன் ஹல்லே பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் முல்லர் பால்கே ஆகியோர் “தரங்கம்பாடி யில் சீகன்பால்கு பணியின் தட யங்கள் தேடல்” என்ற தலைப்பில் ஓவியங்களை காட்சிப்படுத்து கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன்பு தரங் கம்பாடியில் வசித்த மக்களின் கலாச்சாரமும், தற்போதைய கலாச் சாரமும் எப்படி உள்ளது என்பதை நேரடியாக பார்த்து ஓவியங்களாக வரைந்து வருகின்றனர். ஓவிய கண்காட்சிக்காக சீகன்பால்கு அருங்காட்சியகத்தை, அதன் இயக்குநர் டாக்டர் சாமுவேல் மனு வேல் தலைமையில் தயார்படுத் தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7 அன்று நடைபெறும் ஓவியக் கண்காட்சி துவக்க விழா விற்கு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் கிறிஸ்டி யன் சாம்ராஜ் தலைமை வகிக் கிறார். திருச்சபையின் ஆலோ சனை சங்க உறுப்பினர்கள் ஜெர்மனி நாட்டு தூதுவர் மிஹேலா கியூஹிலா மற்றும் அரசு அதிகாரி கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கண்காட்சி 10 நாட்கள் நடை பெறும் என்றும், அனைவரும் வந்து வரலாற்றை அறிந்து கொள்ளு மாறு டாக்டர் சாமுவேல் மனுமேல் அழைப்பு விடுத்துள்ளார்.