பாபநாசம், மே 28-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில், மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டும் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் உளவியல் ஆலோசகர்கள், கல்வி உதவித்தொகை விழிப் புணர்வு, போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் மாணவர் களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினர். பாப நாசம், இதன் சுற்று வட்டாரப் பகுதி மாணவர்கள் பங்கேற்ற னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புனித செபஸ்தியார் திருத்தல நிர்வாகிகள் செய்திருந்தனர்.