மானந்தவாடி, பிப்.11- கேரளத்தில் வயநாடு மாவட்டம் மானந்த வாடியில் குடியிருப்பு வளாகத்தில் சனிக் கிழமையன்று (பிப்.10) காலை 7 மணியளவில் புகுந்த காட்டு யானை, அஜீஷ் (47) என்பவரை மிதித்து கொன்றது. உடனடியாக அவர் மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். மயக்க மருந்து செலுத்தி யானையைப் பிடிக்க 4 கும்கிகளுடன் வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். யானையை சுட்டுக் கொல்ல ஆட்சியர் உத்தரவிடக் கோரி அப்பகுதி மக்கள் சடலத்தை உடற்கூராய்வுக்கு கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேளுர் மக்னா என்கிற இந்த யானை 2023 டிசம்பரில் கர்நாடக வனத்துறையினர் ஹாச னில் கும்கி யானைகள் துணையுடன் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட்டனர். கேரள வனத்துறை அமைச்சர் அறிவித்த படி ஞாயிறன்று (பிப்.11) காலை முதல் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 கும்கி யானைகளுடன் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், நிபுணர்கள் ஈடு பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் வனப்பகுதிக் குள் யானையின் இருப்பிடம் உறுதி செய்யப் பட்டுள்ளது.