districts

பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6-  

    தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறி ஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம்  தேதி தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாடு கிறது. அதையொட்டி 6-ஆம் வகுப்பு முதல்  12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி அன்று காலை 9.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி, புத்தூர் பிஷப்ஹீபர் மேனிலைப் பள்ளியில் நடை பெற உள்ளது

     பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி ”தமிழ் இலக்கிய வர லாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடு கள்” எனும் தலைப்பிலும், பேச்சுப்போட்டி ”தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

     கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாண வர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலை மையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந் துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்து ரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அள விலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி யில் கலந்து கொள்ளலாம்.

    இப்போட்டி கள் தொடர்பலாக கூடுதல் விவரங்கள் பெறு வதற்கு 0431-2401031, 8681047373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம்  பரிசு ரூ.5,000 என்ற அடிப்டையில் பரிசு கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட வுள்ளன.

   மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.