பேராவூரணி, ஏப்.17- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவ மனை நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான நோயா ளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவ மனையில் போதிய அள வில், நோயாளிகளை படுக்க வைத்து அழைத்துச் செல் லும் ஸ்ட்ரெட்சர் இல்லாத நிலை இருந்தது.
இதையடுத்து பேராவூ ரணி அரசு மருத்துவ மனைக்கு சீனிவாசா ஆம்பு லன்ஸ் சேவை மைய உரிமை யாளர் சந்தானம் ரூ.20 ஆயி ரம் மதிப்பிலான ஸ்ட்ரெட் சரை நோயாளிகள் பயன் பாட்டுக்கென தலைமை மருத்துவர் ராமசாமியிடம் வழங்கினார். அப்போது மருத்துவர்கள் பாலா, ரம்யா, இலக்கியா, செவிலி யர் சித்ரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சீனிவாசா ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தினர் பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஆதர வற்ற நிலையில் இறந்து கிடப்பவர்களின் சடலங் களை உடற்கூராய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கும், சடலங்களை தகனம் செய்ய இடுகாட்டிற்கும், கட்டணம் இல்லாமல் கொண்டு வந்து சேர்க்கும் சேவையை, பல ஆண்டு காலமாக செய்து வருகின்றனர். இதனால் ஆம்புலன்ஸ் சேவை உரி மையாளர் சந்தானத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.