கோவை, ஜூலை 1- வெள்ளலூர் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் வசூலித்து 8 வகுப்பறைகள் கொண்ட புதிய கட் டடத்தை கட்டி உள்ளனர். புதுப்பொ லிவு பெற்ற அரசுப்பள்ளியின் முகப் புத்தோற்றத்தை அப்பகுதியினர் வியந்து பார்த்து வருகின்றனர். கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். 1961 ஆம் ஆண்டில் கட்டப் பட்ட இப்பள்ளியில் 1970 ஆம் ஆண்டு பயின்றவர்கள் முதல் அண்மையில் படித்து முடித்த முன்னாள் மாண வர்கள் பள்ளியின் வைரவிழா ஆண்டை கடந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடினர். வைர விழா ஆண்டை ஒட்டி முன்னாள் மாணவர்கள் இணைந்து சுமார் ரூ. 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்ப றைகள் கொண்ட புதிய கட்டிடம் ஒன் றையும் கட்டி அன்பளிப்பாக வழங்கி னர். மேலும், தங்கள் பயின்ற பள் ளிக்கு தேவையான டேபிள், பீரோ உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசை யாக கொடுத்தனர். இந்நிலையில், அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட வைர விழா நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா மற்றும் வைர விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில், இப்பள்ளியில் கடந்த 60 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பள்ளி கால நினை வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த பள்ளி வைர விழா நுழைவு வாயிலை இயற்கை மருத்துவர் அருள்மொழி நடராஜன் திறந்து வைத்தார். வைர விழா மலரை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந் தர் முனைவர் வி.எம்.முத்துக்குமார் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் யு.வி.மருதாச்சலம், முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் பாலசுப்பிர மணியன், தலைமையாசிரியர் பி. பாலன், வைர விழா குழுத் தலைவர் வி.கே.தண்டபாணி உள்ளிட்ட ஆசிரி யர்கள் மற்றும் முன்னாள் மாண வர்கள் திரளானோர் பங்கேற்றனர்.