பெரம்பலூர், டிச.28- பெரம்பலூர் நகராட்சி சாதாரணக் கூட்டம் டிசம்பர் 28 அன்று நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணை யர் ராமரின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறை வேற்றத்தர வேண்டும் என 17 நகர் மன்ற உறுப்பினர்கள் கையெழுத் திட்டு தீர்மானம் ஒன்றை அளித்தனர். அதில், பெரம்பலூர் நகராட்சியில் தற்போது ஆணையராக பணிபுரிந்து வரும ராமர் என்பவர் அவரது நிர்வா கத்திறமையின்மை காரணமாகவும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை மரியாதை குறைவாக நடத்தி வருவதாகவும் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டிட அனுமதி மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவைக்கு மிகப்பெரும் தொகை லஞ்சமாக கேட்பதாகவும் இதுகுறித்து வார்டு பொது மக்கள் நகர்மன்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்து வருவதாகவும் எனவே நகராட்சி ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து 17 நகர்மன்ற உறுப்பினர் கள் கூட்டரங்கில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.