திருச்சிராப்பள்ளி, செப்.29 - தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தி யனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் ஞாயிறன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 23 அன்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் காருக்குள் உட்கார்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மூன்று வகையான படிப்புகளை கூறி, அது மட்டும் செல்லும் என்றும், மற்றவை அனைத் தும் தகுதியில்லாதது போலவும், ஒரு வருட, இரண்டு வருட துணை மருத்துவ வொக்கேசனல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தியும் பேசியு உள்ளார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறை யில் புகாரளித்துள்ளோம், அவரின் இத்த கைய செயலை ஸ்கில் இந்தியன் வன்மை யாகக் கண்டிக்கிறது. நர்சிங் கவுன்சில் பதிவா ளர் தொடர்ந்து எங்களைப் போன்ற வொக் கேசனல் கல்வி மையங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு வருட, இரண்டு வருட துணை மருத்துவப் பயிற்சிகளை நடத்தி வரும் 500-க்கும் மேற்பட்ட வொக்கேசனல் கல்வி மையங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, பதிவா ளர் வெளியிட்ட வீடியோவை விசாரித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வும், இந்நிலை தொடராமல் இருக்க எங்க ளுக்கென தனிவாரியம் அமைத்து எங்களை காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம். இதுதொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்கில் இந்தியன் அஸோசியேசன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.