அறந்தாங்கி, பிப்.14 - ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிப்.16 அன்று பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுவதை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கட்டுமாவடி சாலை முக்கம், அக்னிபஜார், பேருந்து நிலையம் எதிர்ப்புறம் ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.மணிமொழியன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.கர்ணா ஆகியோர் தலைமை வகித்து பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமது ஜின்னா, ஏஐடியுசி ராஜேந்திரன், சிஐடியு மாரிகண்ணு உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.