கரூர், பிப்.8, மத்திய தொழிற்சங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதி நிலை அறிக்கையில் இடம் பெற செய்யாததை கண்டித்தும். பொதுமக்கள், தொழிலாளர், விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் ஒன்றிய நிதி நிலை அறிக்கையை எதிர்த்தும், நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் சங்க மாவட்டத் தலைவர் வி.ஆர். அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழ.அப்பாசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ் வடிவேலன், ஏஐசிசிடியு சங்க மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ், ஹச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தராஜ், எல்எல்எப் சங்க மாவட்ட அமைப்பாளர் மா.சுடர்வளவன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர் ஆகியோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.