districts

img

சங்கம் சேரும் உரிமையை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 23- சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமையைப் பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கத்தினர் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி யுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும் பப் பெற வேண்டும். மக்களை காவு வாங்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26ஆயிரத்திற்கு குறையாமல் வழங்க வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களில் காலியாக இருக்கும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டு்ம்.  ஒப்பந்தம், புற ஆதாரம், பயிற்சியா ளர், தினக்கூலி என தொழிலாளர் களை நிரப்பும் சுரண்டல் முறை யைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறாண்டு காலம் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு  தொழிலா ளர் விரோத சட்ட தொகுப்புகளை நிறைவேற்றிய செப்.22 தேதியை கண்டன நாளாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச நிர்வாகி எஸ்.கோபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், செயலாளர் எச்.ஸ்ரீராம், ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்ன சாமி, எல்பிஎப் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், எச்எம்எஸ் எஸ். மனோகரன், ஐஎன்டியுசி என்.துரை சாமி, எல்டியுசி கிருஷ்ணமூர்த்தி, ஏஐசிசிடியு ஜெ.பி.கார்த்திகேயன், டிடிஆர்எஸ்எப் குணசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற் றினர். சேலம் தொழிலார் விரோத நான்கு சட்டதொகுப்புகளை திரும்பப்பெ றக்கோரி  சேலம் தபால் அலுவ லகம் முன்பு சிஐடியு சாலை போக்கு வரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே தியாகராஜன் தலைமை யில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    தொமுச. மாவட்டச் செயலாளர் பொன்னி இரா.பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சிஐ டியு மாவட்டச் செயலாளர், எ. கோவிந்தன் மற்றும் சிஐடியு நிர்வா கிகள் பி.பன்னீர்செல்வம், வீ.இ ளங்கோ, செம்பான், ஏஐடியுசி மாவட்டசெயலாளர் வி.முருகன், ஐஎன்டியுசி எம்.நடரா ஜன், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர். பி.கணேசன், ஏஐசிசிடியு,  ஆர்.வேல்முருகன் மற்றும் எம் எல் எப் மற்றும் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.