districts

img

தோழர் சி.தம்பி அய்யா மறைவு அனைத்துக்கட்சி பிரமுகர்கள் அஞ்சலி

புதுக்கோட்டை, பிப்.27-  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள்  புதுக்கோட்டை மாவட்டக் குழு உறுப்பினரும், கறம் பக்குடி ஒன்றியம் மணமடை ஊராட்சியின் முன்னாள் தலைவருமான மூத்த தோழர்  சி.தம்பி அய்யா (75), உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமையன்று காலமா னார். அவரது இறுதி நிகழ்ச்சி  அவரது சொந்த ஊரான மண மடையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தோழர் தம்பி அய்யா வின் உடலுக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, சிபிஎம் மாவட் டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், தஞ்சாவூர் முன் னாள் மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், திமுக ஒன்றி யச் செயலாளர் வி.முத்துக் கிருஷ்ணன், அதிமுக ஒன்றி யச் செயலாளர் கணேசன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி, சிபிஐ (எம்எல்) ஒன்றியச் செயலா ளர் ஏ.ரெங்கசாமி, பாஜக ஒன்  றியத் தலைவர் ஜி.பாலசுப்பி ரமணியன், விசிக மாவட்ட துணைச் செயலாளர் ஆத வன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்பு களைச் சேர்ந்த தலைவர்கள், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ராமை யன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே. சண்முகம், சி.அன்புமணவா ளன், சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் தம்பி அய்யா மறைவிற்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஐ.வி.நாகராஜன், சாமி.நடராஜன் உள்ளிட் டோர் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளனர்.  கட்சியின் வடக்கு ஒன்றி யச் செயலாளர் வீரமுத்து  தலைமையில் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் உள்  ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.