பட்டுக்கோட்டை, அக்.15- மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு அலிவலம் எஸ்.இ.டி. வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் 12-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், ஆண்கள் பிரிவு - 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாண வர் சச்சின் சரண் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள் ளார். மேலும், 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சச்சின் சரண், ஈசன் ஆகியோர் வெற்றி பெற்று, மாநில அளவி லான போட்டிக்கு இரட்டையர் பிரிவில் தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களையும், அதற்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.ஆர்.திரவியம், இலக்கியா ஆகியோரையும், பள்ளியின் நிர்வாக இயக்குநர் எல்.கோவிந்தராசு, தாளாளர் சித்ரா கோவிந்த ராசு, பள்ளி முதல்வர் கதிரவன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.