districts

அரசு கல்லூரியில் மது விலக்கு விழிப்புணர்வு போட்டிகள்

அறந்தாங்கி, மார்ச் 3-  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் இணைந்து நடத்திய மது விலக்குக் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியம் என மூன்று வகையில் நடைபெற்ற போட்டிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் கல்லூரியின் பல்வேறு துறைசார்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா. காளிதாஸ், இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் அ. டேவிட் கலைமணிராஜ், தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் முனைவர் ச. கணேஷ்குமார், முனைவர் க. செல்வி, முனைவர் தே. தேன்மொழி, ரா. ராஜலட்சுமி, ந. வனிதா, ஆங்கிலத்துறை விரிவுரையாளர்கள் தி. சிவராஜன், செ.மாதவன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை ஒருங்கிணைத்திருந்தார்.