பெரம்பலூர்,பிப்.1- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆதார் எண் இணைத்து செயல்படுத்தும் அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் 11 கோடி பேரைத் திட்டத்திலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ள பாஜக அரசைக் கண்டித்தும், இதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தி யின் நினைவு நாளான ஜனவரி 30 (புதனன்று) தமிழ்நாடு முழு வதும், ஒன்றிய அரசு அலுவலகங் கள் முன்பு நகல்எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அ.முருகேசன் தலைமை வகித்தார். சங்க மாவட்டத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் அ.கலையரசி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் பேசினர்.