நாகப்பட்டினம், ஜன.31 - நூறு வேலை பார்த்த தொழிலாளர் களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்த்த தொழி லாளர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை கண்டித்தும் ஒன்றிய அரசு நூறு நாள் வேலைக்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் வியாழனன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பங்கேற்றார். கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.துரைராஜ் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் ஒன்றிய அலுவ லகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் வி.தொ.ச மாவட்டச் செயலாளர் எம்.முருகை யன் கலந்து கொண்டார். மாவட்டத்தில் திரு மருகல், தலைஞாயிறு, நாகை, கீழ்வேளூர் ஆகிய ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் டி.முருகேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.கலிய பெருமாள், விதொச ஒன்றியச் செயலாளர் பி.காளியப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.அண்ணாதுரை, கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென்னடி, வாலிபர் சங்க செயலாளர் எஸ்.ராஜா ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி நிறைவுரையாற்றினார். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வி.தொ.ச மாவட்டக் குழு உறுப்பினர் சி.வீர சேகரன் தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் என்.ராஜேந்திரன், ஒன்றியத் தலைவர் ஆர்.வீரமணி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தனர். கோட்டூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சண்முகவேலு, விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலுச்சாமி, கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.