districts

img

விவசாயத் தொழிலாளர், விவசாயிகள் சங்க சந்தா சேர்ப்பு இயக்கம்

திருவாரூர், அக்.2 - திருவாரூர் ஒன்றியத்தில் விவசாய தொழி லாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில்  சந்தா பதிவு நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியம் வேப்பத்தான்குடி ஊராட்சியில் நடந்த சந்தா பதிவில், விவசா யிகள் சங்கம் சார்பில் 341 சந்தாக்களும், விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் 271  சந்தாக்களும் என மொத்தம் 612 சந்தாக்கள்  பதிவு செய்யப்பட்டன. சந்தா தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் என்.சக்திவேல் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரையிடம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி.கந்தசாமி 612 சந்தாவுக்கான தொகையை வழங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்  எம்.சேகர், ஒன்றியச் செயலாளர் ஜி.பவுன் ராஜ், விதொச ஒன்றியச் செயலாளர் பி.ராஜாங்கம் மற்றும் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் என்.இடும்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கொரடாச்சேரி ஒன்றியம்  கிளரியம் ஊராட்சியில், இரு சங்கங்களின் சார்பில் 1100 சந்தாக்கள் பதிவு செய்யப்பட் டன. இச்சந்தா தொகை மாநிலத் தலைவர் எம்.சின்னதுரையிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றியச் செயலாளர் ஆர்.மணியன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. செந்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.