திருச்சிராப்பள்ளி, ஆக.30 - தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரக அலு வலக வளாகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்தி ரங்களின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத் துதல், பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் குறித்து விவசாயி களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தனி யார் நிறுவனங்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகரணங்கள் மற்றும் கருவிகள் மூலம் விவசாயி களின் வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வேளாண்மைத்துறை இணை இயக்கு நர் சக்திவேல், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியா ளர் குமரகணேஷ் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் மாவட்ட பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.