districts

img

வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்: பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை, அக்.28 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூரில் வேளாண் துறை சார்பில் நடை பெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்த ரங்கை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதாமுரு கன் தொடங்கி வைத்தார். திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண் துறையின், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வெள்ளி யன்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை  இணை இயக்குநர் ஜெ.சேகர் வரவேற்று பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன் (பூம்புகார்), பன்னீர்செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயிலாடுதுறை) ஆகி யோர் உரையாற்றினர். வேளாண் வல்லு நர்கள், மூத்த விவசாயிகள் பலர் கருத்தரங்கில் பங்கேற்று, பல்வேறு தலைப்பு களில் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச காவ்யம், பூச்சி விரட்டி  தயாரிப்பு முறை குறித்தும் பேசினர். முன்னதாக கண்காட்சி அரங்கை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார். பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல்வேறு  பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந் தன. மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருக தாஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.