districts

img

மங்காவரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தால் சாலை, மின்மாற்றி அமைப்பு

திருவள்ளூர், ஜூலை 29- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மங்காவரம் ஊராட்சியில் விவசாய தொழி லாளர் சங்கத்தின் போராட்டத்தால் சாலை  மற்றும் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கவாரம் ஊராட்சியில், மங்காவரம் முதல் அப்பாவரம்  வரை செல்லும் சாலை   பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் பொது மக்கள் இரண்டு சக்கர வாகனங்களில் கூட பயணிக்க முடியாத நிலை இருந்தது. பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலி யுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் முதல்வரின் அனைத்து  கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மங்காவரம் முதல் அப்பாவரம்  வரை  1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.108 லட்ச மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. அப்பாவரம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  குறைந்த மின்னழுத்த மின்சாரத்தால் குடிநீர் மோட்டார்கள் இயக்கா மல் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் மின் விசிறிகள் இயங்க வில்லை. மாணவர்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண் டும் என வலியுறுத்தி விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 18  அன்று கும்மிடிப்பூண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து அப்பாவரம் கிராமத்திற்கு உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்து கொடுத்தனர். இதனால் விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். இதில் போராட்டத்தை மேற்கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், வட்டத் துணைத் தலைவர் பி.ஜோதி, 2 வது வார்டு  உறுப்பினர் ஜெயந்தி மனோகர், 3 வது வார்டு உறுப்பினர் கே.சூரியபிரகாஷ், 9 வந்து  வார்டு உறுப்பினர் பாரதி குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.