districts

img

மீண்டும் மஞ்சப்பை திட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதனை

மயிலாடுதுறை, அக்.12 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூ ராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறப் பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான  “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை  அரசு அறிவித்தது முதல், தரங்கம் பாடி பேரூராட்சி அதனை முதல் பணி யாக செய்து பொதுமக்களை வெகு வாக கவர்ந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்று வருகிறது. உலகின் மிக பழமையான கடற் கரை நகரமான தரங்கம்பாடிக்கு  நாள்தோறும் பல்லாயிரக்கணக் கானோர் வெளிநாடு, வெளி மாநி லங்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் வந்து செல்கின்றனர். உலகில் ஓசோன் கலந்த காற்று மிக அதிகமாக தரங்கம்பாடி பகுதியில் வீசுவதால், அதிகளவிலான மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது.  பரபரப்பாக காணப்படும் இப்பகு திகளையும், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதியையும் ஒவ்வொரு  நாளும் அதிகாலையிலேயே பேரூ ராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தி, வீடுகள்தோறும் பெறும் குப்பைகளை பிரித்து சேக ரித்து, அதனை திடக்கழிவு மேலாண் மையில் தரம்பிரித்து மீண்டும் மறு சுழற்சி செய்து, உரமாக மாற்றி 18 ஆண்டுகளுக்கு மேலாக லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு  அறிவித்த திட்டமான “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை பேரூராட்சி  பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், நாள்தோறும் இப்பகுதிக்கு வந்து  செல்லும் அனைத்து தரப்பினரிடமும் மஞ்சப்பையை வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடை களுக்குச் செல்லும் போது பேரூ ராட்சி வழங்கிய மஞ்சப்பையை கை களில் எடுத்துச் செல்ல வைத்துள்ள னர்.  பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, பேரூராட்சி செயல் அலுவலர்  கமலக்கண்ணன், துணைத் தலை வர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் அலுவலர்கள், ஊழி யர்கள், தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்து செய்து வருகிற சிறப்பான இப்பணியால், பிளாஸ்டிக்  பயன்பாடு பெரும்பாலும் குறைந் துள்ளது.  இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான துணிப்பைகளை இந்தியன் வங்கி மற்றும் நிறுவ னங்களிடம் நன்கொடையாக பெற்று மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் ஏதேனும்  சிறு நிகழ்ச்சிகள் நடந்தால்கூட அங்கு மீண்டும் மஞ்சப்பை என்ற  பிளாஸ்டிக் விழிப்புணர்வு பொறித்த  துணிப்பை விநியோகிக்கப்படுவதை காண முடியும். உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும்  வெளிநாட்டவர்களுக்கும் மஞ்சப் பையை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். செ.ஜான்சன்