தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கள்ளர் நத்தத்தில் ஏர்வாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் பகுதிநேர அங்காடி திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வம் அங்காடியை திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன், மெலட்டூர் பேரூராட்சித் தலைவி இலக்கியா ஆகியோர் பங்கேற்றனர்.