districts

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை

தஞ்சாவூர், ஜூன் 5-  

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024  ஆம் கல்வியாண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக் கிறது.  

    இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவியர் ஜூன் 5  திங்கள் கிழமை முதல், ஜூன் 15 வரை, www.https: //scert.tnschool.gov.in என்ற  இணையதள முகவரியில்  விண்ணப்பிக்கலாம்.  

   அவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலா தவர்கள், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல் பட்டு வரும், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தஞ்சா வூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி  நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.