தஞ்சாவூர், ஜூன்.27 - தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் நடத்தப்படும் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமையன்று தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் சி.தியாகராஜன் வாழ்த்திப் பேசினார். இலக்கியத்துறை பேராசிரியர் பெ.இளை யாப்பிள்ளை வரவேற்றார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்னும் இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.