தூத்துக்குடி, ஆக.24- ஆதிச்சநல்லூர் தொல்பொருள் ஆய்வு அருங்காட்சியகத்தினை ஒவ்வொரு கல்லூரி மாணவ மாணவி களும் அவசியம் காணவேண்டும் என்று மக்களவை உறுப்பினர் கனி மொழி கூறினார். ஆதிச்சநல்லூர். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஸ்ரீவை குண்டம் அருகே 125 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ள மிகப்பெரிய பரம்பு. இந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு டாக்டர் ஜாகோர் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆய்வா ளர் முதன் முறையாக ஆதிச்சநல்லூ ரில் அகழாய்வு பணிகளை மேற் கொண்டார். அப்போது அவர் கண்டு பிடித்த பொருட்களை அவரது நாட்டிற்கு கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை உருவாக்கப் பட்டு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறி வித்தது. இதையடுத்து தொடர்ந்து பல கட்டங்களை இந்திய தொல்லி யல் துறை மற்றும் தமிழக தொல்லி யல் துறை சார்பில் அகழாய்வு பணி கள் நடந்துள்ளது. இந்த அகழாய்வு பணியில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதியானது. ஆதிச்சநல்லூ ரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட் சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகளை தொடங்கி அகழாய்வுப் பணிகள் நடந்தன. இந்த அக ழாய்வு பணியில் தங்கம், வெண்க லம், இரும்பால் ஆன பொருட்கள், மண்பாண்டத்தில் ஆன முது மக்கள் தாழிகள், பல்வேறு தொல்லி யல் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஏ, பி, சி என்ற மூன்று பிரிவு களாக நடந்த அகழாய்வு பணியில் பி மற்றும் சி பிரிவுகளில் அதிக மாக பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதில் பி சைட்டில் இந்தியா விலேயே முதன் முறையாக சைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த சைட் அருங்காட்சியகம் என்பது தொல் பொருள்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்து வதே ஆகும். அப்படித்தான் இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தமி ழர்கள் இங்கு வந்து இந்த சைட் அருங்காட்சியகத்தினை பார்வை யிட்டு பாராட்டிச் செல்கின்றனர் என்றார். கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக் குடி மாவட்ட மாதிரி பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி. அப்போது இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனை வரும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லி யல் சார்ந்த நமது பண்பாடு சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என, கனிமொழியிடம் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கனி மொழி அவர்களின் ஆசையை நிறைவேற்றினார். இதற்காக சனியன்று கீழவல்ல நாடு மாவட்ட மாதிரி பள்ளிக்கு சென் றார். அங்கிருந்து 4 பேருந்துகள் மூலம் 200 மாணவ மாணவிகளை ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த பேருந்து களில் மாணவ மாணவிகளுடன் பய ணம் செய்தார். மாணவ மாணவி களுடன் ஆதிச்சநல்லூர் பி சைட்டில் உள்ள சைட் அருங்காட்சியகம், சி சைட்டில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை பார்வை யிட்டார். அதன் பின் அவர் செய்தியா ளர்களிடம் பேசியதாவது: “பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத் தினை பார்க்க வேண்டியது மிக அவ சியமாகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே அரசு மாதிரி பள்ளியை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்து காட்டியுள்ளோம். இதுபோல் மற்ற பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காண வர வேண்டும். உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் துவங்கும் பணி சிறிது காலம் தாமதப்பட்டது. தற்போது இந்த பணியை துவக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள் ளேன். விரைவில் அந்த பணி துவங்கும். திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் மாநில தொல்லியல் துறை யினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அரங்கில் மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து எடுத்த பொருள்களை காட்சிப் படுத்த நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று அவர் கூறினார். மாணவ-மாணவிகளுக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத் தினை பற்றி திருச்சி மண்டல மத்திய தொல்லியல் ஆய்வாளர் முத்துகுமார், தள மேற்பார்வையா ளர் சங்கர், எழுத்தாளர் முத்தா லங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.