திருச்சிராப்பள்ளி, மே 15-
திருச்சி மாவட்டம் துறையூரில் ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆதிதிரா விடர் நல மாணவர் விடுதியை காணொலி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயல கத்திலிருந்து திங்களன்று திறந்து வைத்தார்.
துறையூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். துறையூர் நகராட்சித் தலைவர் செல்வராணி, ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.
இவ்விடுதி தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 3 தளங்களுடன் 595.54 ச.மீ கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடுதியில் 9 மாணவர்கள் அறை, 1 காப்பாளர் அறை, 1 நூலகம், 1 பொருள் வைக்கும் அறை, 1 எரிபொருள் அறை, 1 உணவருந்தும் அறை, 1 சமயலறை, 8 குளியலறை, 15 கழிவறை என மொத்தம் 38 அறைகள் கொண்டதாக ரூ.2.44 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ளது.