புதுக்கோட்டையை அடுத்த ஆதனக்கோட்டையில் விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண் விரிவாக்க மைய புதியக் கட்டிடத்தை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்து, வேளாண்மை-உழவர் நலத்துறை- வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.64.68 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.