அரியலூர், ஜூன் 23- அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப் பீட்டில் கூடுதல் கட்டிடத்துக்கு ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக செந்துறை அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 50 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டி டத்துக்கு கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தார். பின்பு, “மூன்று தளங்களுடன் கட்டப்ப டும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில், 50 படுக்கை வசதிகளுடன், சிறப்பு அவசர சிகிச்சை பிரிவு (கிரிட்டி கல் கேர் சென்டர்), சிறப்பு சிகிச்சை பிரிவு, பாம்புக் கடி, நாய்க்கடி, விபத்து காயங்களுக் கான முதலுதவி உள் ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் அமைக் கப்படவுள்ளது” என்றார். மேலும் நல்லாம் பாளையம், உஞ்சினி முதலியர் தெரு, கால னித் தெரு, பரணம், ராச பாளையம், குமிழியம் ஆகிய ஊர்களில் ரூ.59.75 லட்சம் மதிப்பீட்டிலான ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்தார். முன்னதாக, குமிழியம் அல்லூர் பட்டி தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 7.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சி க்கு மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.