புதுக்கோட்டை, ஏப்.20-
புதுக்கோட்டை ரயில்வே நிலையம் வழியாக எக்ஸ் பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில் என நாளொன்றுக்கு 20- க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலை யில், இந்த ரயில்வே நிலையம் அம்ருத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் ரயில்வே அதிகாரி கள் அவ்வப்போது ரயில்வே நிலையத்தை ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதனன்று மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் புதுக்கோட்டை ரயில்வே நிலை யத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது ரயில்வே பாதையான தண்டவாளம், சிக்னல், லெவல் கிராசிங் அனைத்தும் முறையாக உள்ளதா என உபகரணங்களை கொண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் புதுக்கோட்டை ரயில்வே நிலையம் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் மின்பாதைகளை யும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆய்வில் மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.