பேராவூரணி, மே 5-
அதம்பை ஊராட்சிக்கு சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என அதம்பை கிராம மக்கள் சார்பில், தமிழர் அறம் இயக்கத் தலைவர் இராமசாமி, வீரப்பன், முரு கேசன் ஆகியோர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் நா.அசோக்குமார் ஆகியோருக்கு பதிவு அஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா அதம்பை ஊராட்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இதுவரை சமுதாயக் கூடம் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்க ளில் வீடற்றவர்களை தங்க வைக்கவும், காதணி, வளை காப்பு, திருமண விழாக்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த வும் இடமின்றி தவித்து வருகிறோம். எனவே தாங்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்து எங்கள் ஊராட்சியில் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.