districts

img

கொத்தமங்கலத்தை புதிய ஊராட்சி ஒன்றியமாக்க நடவடிக்கை

புதுக்கோட்டை ஜூலை 29 - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்க லத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உரு வாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  வட்டம் கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பி னர் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஒதுக்கிய நிதி ரூ.1.25 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகி யோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், “திமுக ஆட்சி யில் கடந்த 3 ஆண்டுகளில் ஆலங்குடி தொகு தியில் சுமார் ரூ.700 கோடியில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற் போது மேம்பட்டு இருக்கிறது. புதுக் கோட்டை மாவட்டத்தில் 3000 குடும்பங் களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. திருவரங்குளம் ஒன்றியத்தை இரண் டாகப் பிரித்து கொத்தமங்கலத்தை தலைமை  இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றி யத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக  முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அக்கோரிக்கை விரைவில் நிறை வேறும்” என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய அமைச் சர் ப.சிதம்பரம் பேசுகையில், “நாட்டில் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டும் தான் மொத்த மக்களின் வளர்ச்சி குறி யீடாக இருக்கிறது. ஆகையால்தான், எனது தொகுதி நிதியை கல்விக்கும் சுகாதா ரத்துக்கும் செலவிட்டு வருகிறேன். இம்மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம்  கட்டப்பட்டிருந்தாலும் அதற்கு தேவை யான உபகரணங்கள், மருத்துவர் மற்றும்  மருத்துவரல்லா பணியிடங்களை வழங்க  வேண்டும் என மாநில சுகாதாரத் துறை  அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக் கிறேன். நிறைவேற்றித் தருவதாக அவரும் உறுதி அளித்திருக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை இன்றுவரை பலமாக இருக் கிறது. அதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயில் கம்பீரமாக உள்ளது. ஆனால், 20  ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு கட்டி டம் சேதமடைந்து வருகிறது. போதிய நிதியை  அரசு ஒதுக்குவதால், தலைமுறை கடந்தும்  பெயர் சொல்லும் அளவுக்கு ஒப்பந்ததா ரர்கள் கண்ணும் கருத்துமாக கட்டிடங்களை  உறுதியாகக் கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றார்.