புதுக்கோட்டை, ஜன.28 கனிமவளக் கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இடது சாரிக் கட்சிகளின் சார்பில் திருமயத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, வெங்கர் கிராமத்தைச் சேர்ந்த ஜகபர் அலி கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து தொடர்ந்து போராடி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கனிமவளக் கொள்ளை யர்கள் ஜகபர் அலியை கடந்த ஜன.16 ஆம் தேதி லாரி ஏற்றிப் படுகொலை செய்துள்ள னர். மேற்படி, கனிமவள கொள்ளையர்கள் மீதும், அதற்குத் துணை போன அதிகாரிகள் மீதும் உரிய முறையில் வழக்குப் பதிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமயம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஜெ.வைகைராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சி.சிவனான்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் வி.மு. வளத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், சிபிஐ மாவட்டப் பொருளா ளர் என்.ஆர்.ஜீவானந்தம், சிபிஐ(எம்.எல்) மாவட்ட நிர்வாகி சின்னத்துரை மற்றும் எஸ்.வீரமணி, எஸ்.வீரய்யா, பி.பழனிவேல், ஆரோக்கியசாமி, சந்தோஷ், வெள்ளைச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.