கரூர் ஆட்சியர் எச்சரிக்கை கரூர், டிச.2 - கரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் தலைமையில் கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட் டது. இதில், தகுதிச்சான்று இல்லாமல் பொதுச் சாலையில் இயக்கப்பட்ட 38 வாக னங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் ரூ.30,000 வசூலிக்கப்பட்டு, ரூ.82,500 இணக்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புகைக் கட்டுப்பாட்டுச் சான்று இல்லாமல் பொதுச் சாலையில் இயக்கப்பட்ட 59 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப் பட்டு, இணக்கக் கட்டணம் ரூ.27,000 வசூலிக் கப்பட்ட நிலையில், ரூ.4,10,000 இணக்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதி களைமீறி இயக்கப்பட்ட 32 ஆம்னி பேருந்து களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப் பட்டு, ரூ.60,000 இணக்கக் கட்டணம் வசூலிக் கப்பட்டு, ரூ.22,500 இணக்கக் கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளை மீறி இயக்கப்பட்ட 261 இதர வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப் பட்டு, இணக்கக் கட்டணம் ரூ.2,57,000 மற்றும் சாலை வரி ரூ.13,785 வசூலிக்கப்பட்டு இணக்கக் கட்டணம் ரூ.7,02,500 வசூலிக்கப் பட்டு 18 வாகனங்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளன. இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொண்டு மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளைமீறி இயக் கப்படும் வாகனங்களின் மீது உரிய மேல்நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.