திருச்சிராப்பள்ளி, மே 21 - 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைத்து குடும்பத்துக்கும் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்து பயணித்து வரு வதாக மத்திய அமைச்சர் பிர கலாத்சிங் படேல் கூறினார். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித் துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டார். அப்போது அணை தொடர்பான விவரங் களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார். இதனை தொடர்ந்து கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணி களையும் பார்வையிட்டார். அதன்பிறகு மத்திய இணை அமைச்சர் பிரக லாத் சிங் படேல் செய்தியாளர் களிடம் கூறியதாவது: “கடந்த 2 ஆண்டு களில் ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான செயல்பாடு களில் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் 12 சதவீதம் பின்தங்கி உள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு. 2024 ஆம் ஆண்டு க்குள் இந்தியா முழுவதும் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குடி நீர்’ என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அதை எட்ட வேண்டும் என் றால் தமிழகம் இன்னும் மூன்று மடங்கு வேகமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை அனைவரும் தண்ணீர் சேமிப்பதை அவசியம் என உணர வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்கக் கூடாது. ஜல் ஜீவன் திட்டத்துக்காக ஏற்க னவே தமிழக அரசுக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண் டாவது தவணை நிதி கிடைப் பதற்கு அதற்கான வேலை கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறதோ, அவ்வளவு விரைவாக அதற்கான நிதி தானாகவே மாநிலங்களுக்கு வந்துவிடும்”. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம், செயற் பொறியாளர்கள் மணி மோகன், கீதா மற்றும் பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரக லாத்சிங் படேல் திருச்சி அரியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு பதப்படுத்தும் தொழிற்சா லையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.