அகஸ்தியர் அருவிக்கு செல்ல இன்று முதல் அனுமதி
அகஸ்தியர் அருவிக்குச் செல்ல இன்று முதல் அனுமதிக்கப் படுகிறது. நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை நடைபெற்ற அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி தற்போது நிறைவுற்றது. இதனால் மார்ச் 3 திங்கட் கிழமை முதல் மீண்டும் பாபநாசம் சோதனைச்சாவடி திறக்கப் பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் சொரிமுத்தைய்ய னார் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்ல அனு மதிக்கப்படுவர் என பாபநாசம் வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.